வியாழன், 16 ஆகஸ்ட், 2012

'மயிலின் சிறகுகளான ' தோகைகள்

பத்தொன்பதெட்டிரண்டாயிரத்துப்பனிரெண்டு
ஞாயிருபெயர்கொண்ட நன்னாளில்
கோயம்புத்தூர் குறிச்சிக்கருகே மண்
மணக்கும் மாச்சம்பாளயத்தில் மனம்
மயக்கும் ' மயில் இளந்திரையன் ' எழுதிய
முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா.
        'மயிலின் சிறகுகள் ' என் சிந்தையில்
தேடியபோது சில அர்த்தங்கள் அகப்பட்டன
எத்தனை சாதிகள் கொண்ட தமிழகம் -அத்தனையும்
தமிழ் கலாசார வட்டத்துக்குள் ஒன்றாக...
வண்ணங்கள் அனைத்தும் மயிலின் சிறகுகளுக்குள்
ஒன்றாக குடிகொண்டிருப்பதைப்போல
எத்தனை கட்சிகள் கொண்ட தமிழகம் -அத்தனையும்
தமிழ் பெயரைச்சொல்லி வாழ்கிறது ....
வண்ணங்கள் அனைத்தும் மயிலின் சிறகுகளுக்குள்
ஒன்றாக குடிகொண்டிருப்பதைப்போல

எத்தனை விரோதம் தமிழகம் மீது -அத்தனையும் 
அழிவது தமிழனின் சகிப்புத்தன்மையால் ....
வண்ணங்கள் அனைத்தும் மயிலின் சிறகுகளுக்குள்
ஒன்றாக குடிகொண்டிருப்பதைப்போல இந்த
' மயிலின் சிறகுகள் '  முகிலின் முகவரியைப்போல 

அகிலமெங்கும் தவழ்ந்துசென்று ஆயிரமாயிரம் 
கவிதை நூல்கள் நூற்கும் கவிஞனாக அன்பிற்குரிய 
' மயில் இளந்திரையன் ' திசையெட்டும் வெற்றிகான 
வேண்டுமென்று வாழ்த்தும்.
                                 மாச்சம்பாளையம் மாரியப்பன்.

வெள்ளி, 16 மார்ச், 2012

உலக நாடுகளுள்ளு இந்தியாவின் கள்ளத்தனமான மறைமுகசெய்தி.....

இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்காக ஐ;நா; சபையில் இந்தியா கண்டன
தீர்மானம் கொண்டுவராததன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தெரிவிக்கும் செய்தி இதுவாக
இருக்குமோ?.
                    ஓ உலக நாடுகளே உலக நாடுகளே 
உங்கள் கொலை வெறிக்காக குழந்தைகளை  கொல்லவேண்டுமா ,
உங்கள் அதிகார வெறிக்காக இளைஞர்களை கொல்லவேண்டுமா ,,
உங்கள் ஆசைக்காக பெண்களை பெண்களை கொல்லவேண்டுமா,
ஆனவத்துக்காக முதியோரை கொல்லவேண்டுமா 
உங்கள் நாட்டிலுள்ள தமிழர்களை, தமிழ் இனத்தை 
 கொடுமைப்படுத்துங்கள்,கொன்று குவியுங்கள்  
அதற்காக நாங்கள் உங்களை கண்டிக்க மாட்டோம், உங்கள் 
மீது மனித உரிமை மீறல் அமைப்புகளோ, மற்ற நாடுகளோ 
ஐ.நா சபையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவந்தாலும் 
அதில் உங்களுக்கு எதிரான நிலையை எடுக்கமாட்டோம்.
ஏனென்றால் ஒற்றுமையில்லாத எங்கள் நாட்டிலுள்ள 
தமிழ் தலைவர்களுக்கு பதவி என்ற எலும்புத்துண்டை வீசி 
அவர்கள் வாயை அடைத்துவிடுவோம். உங்கள் நட்பு மட்டும் 
எங்களுக்கு கிடைத்தால் போதும்.
குறிப்பு; எங்கள் நாட்டை சேர்ந்த சீக்கிய,குஜராத்திய,பிகாரிய 
இனத்தை சார்ந்தவர்கள் தாக்கப்படும்போது,கொலை 
செய்யப்படும்போது, அவமானப்படுத்தப்படும்போது 
உடனடியாக நடவடிக்கை எடுப்பதை பார்த்து, தமிழனுக்கும்,

தமிழினத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவோமோ 
என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று 
இந்திய அரசு உறுதியாக, உங்களுக்கு மறைமுகமாக 
தெரிவித்துக்ககொள்கிறது.

புதன், 18 ஜனவரி, 2012